சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையாமல் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் காரணத்தால் நேற்று மட்டும் 203 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே சென்னையில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் 52 வயதான பெண் பணியாளர் ஒருவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது அந்த பெண் பணியாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்றவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…