டெல்லியில் 400-ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு..!!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 395 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த வைராஸால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 24,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,222,86 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 395 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,772 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,08,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.