கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சீரியல் நடிகை நீலிமா.! குவியும் வாழ்த்துக்கள்.!!

நீலிமா ராணி, தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022 இல் வரவேற்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

வாணி ராணி, அத்திப்பூக்கள், ஆகிய சீரியல்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி சீரியலில் நடித்து வந்தார். பின்னர் சில காரணங்களலால் அதிலிரிருந்து விலகினார். சீரியல்களில் மட்டுமில்லாமல்,பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதிதி என்ற பெண் குழந்தை உள்ளது. இதனை தொடர்ந்து, நீலிமா ராணி, தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022 இல் வரவேற்கத் தயாராக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ” இனிய ஆண்டுவிழா பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம், ஜனவரியில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டதுஇன்னும் 20 போக வேண்டும். எங்களுக்கு மகிழ்ச்சி” பதிவிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.