எட்டு மாதங்களுக்கு பின்பு தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு!

கொரோனா பெரும் தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டு இருந்ததால் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழகம் முழுவதிலும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு தற்பொழுது வரையிலும் நடைமுறையில் இருக்கிறது. மார்ச் மாதம் முதலே பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் அடுத்த கல்வி ஆண்டு தற்பொழுது துவங்கி உள்ளதால் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கும் முறை அமலில் இருந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் இது சாதகமாக அமையவில்லை. செப்டம்பர் மாதத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அவர்களது விருப்பத்தின் பேரில் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்றது. அதுபோல முதுகலை பட்டப் படிப்பு ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வக வசதிகளுக்காக கல்லூரி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி கல்லூரிகளைத் திறக்க அறிவுறுத்தப்பட்டது.

இதனை எடுத்து 8 மாதங்களுக்குப் பிறகு திட்டமிட்டபடியே தற்பொழுது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள், முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய அறிவியல் பொறியியல், தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் திட்டமிட்டபடி வருகிற இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். விரைவில் செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் இவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரிக்கு வரும் பொழுது முக கவசம் அணிந்து வளாகத்திற்குள் உரிய சீரான சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்களிடம் உரையாடும்போது மாணவர்களுடன் உரையாடும் போதும் போதிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், அவ்வப்போது கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தையும் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

5 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

5 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

5 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

5 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

6 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

6 hours ago