நன்கொடை வசூலித்தல் சட்டப்படி குற்றம் – சென்னை உயர் நீதிமன்றம்

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.

அறக்கட்டளைகள் மூலம் மாணவர்களுக்கு வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்தவேண்டும் என்ற வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிராக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நன்கொடைகள் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறு நன்கொடைகள் வசூலிப்பதை நிறுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல் தெரிவிக்க ஒரு இணையதளம் ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment