கோவை செல்வபுரம் பகுதியில் அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதிவு

கோவை செல்வபுரம் பகுதியில் வாக்குபதிவின் போது  ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட்டு திரும்பினார்.அப்பொழுது அதிமுக மற்றும் பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சென்ற காரை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச்சாவடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டினர்.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.அப்பொழுது அங்கு வந்த துணை ராணுவ படையினர் சிவசேனாதிபதி சென்ற காரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து வெளியே அனுப்பிவைத்தனர்.அதன் பின்னர் சிவசேனாதிபதி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று இதுகுறித்து புகார் அளித்தார்.

இந்நிலையில் செல்வபுரம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் ,நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் ,சட்டவிரோதமாக கூடுதல் என்று பெயர்  குறிப்பிடாமல் அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

40 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

52 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

2 hours ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

2 hours ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

3 hours ago