பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கடுத்தப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல்.
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளி துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகளையும் விளக்கியுள்ளார்.
நேற்று மேற்கு மாவட்ட நாடாளுமன்ற எம்பிக்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பருத்தி விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சரை தொடர்புகொண்டு, முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…