விவசாய பணியில் இருந்த பெண்களுக்கு முகக்கவசம் வழங்கிய முதல்வர்!

விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி முகக்கவசங்கள் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் தஞ்சை, திருவாரூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் கோயில் வெண்ணி பகுதிக்கு அருகே ஆதனூர் என்ற கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள நெல் வயல்களில் களை பறித்துக்கொண்டிருந்த விவசாய பெண்களிடம் நடைபெறும் விவசாய பணிகள் குறித்து அவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்பொழுது அங்கு பணிபுரிந்த பெண்களுக்கு முகக்கவசங்கள் வழங்கினார். அவருடன் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கள் துறை அமைச்சர் காமராஜர் உடனிருந்தார்.