கடலூர் மாவட்டம் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளரான இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் திருமாறன் 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் முத்துப் பெருமாள் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த மறுநாளே கிராமங்களுக்கு சென்று தனக்கு வாக்களித்த அனைவருக்கும் முத்துப் பெருமாள் நன்றி கூறினார். அதுமட்டுமல்லாமல் அப்போது உங்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் கடந்த இரண்டாம் தேதி சிக்கன் பிரியாணி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விருந்தில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…