கேரளாவில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன்.
தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
நிவாரண முகாம்களில் இரண்டரை லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கிய 40 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர் .ராணுவம், விமானப்படை, கடற்படை என அனைத்து படைகளும் தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனது.கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கவலபரா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் காரணமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளது.மேலும் நிலச்சரிவில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அவர்களில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 40 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.மேலும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,அனைத்து பிரச்னைகள் மற்றும் சிரமங்களையும் ஒன்றாக நின்று எதிர்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…
Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…