உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவிய காரணத்தால் இந்திய்யா முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறத்தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்து போரிடும் இந்த சூழலில் இந்திய பிரதமர் பொதுமக்களின் ஒற்றுமையை மேம்படுத்த ஏற்கனவே கொரோனாவை எதிர்த்து போரிட உதவும் பணியாளர்களுக்க நன்றி தெரிவிக்க அனைவரையும் கைதட்டும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் படி இந்தியா முழுவதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் நின்றும், வீட்டின் மாடியில் நின்றும் கைகளை தட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் இந்திய பிரதமர் இந்திய மக்களின் ஒற்றுமைக்காக ஒற்றுமைக்கான ஒளி என நேற்று இரவு விளக்குகளை அணைத்து விட்டு தீப விளக்குகளை ஏற்ற வேண்டுகோள் விடுத்தார். இதனையும் மக்கள் ஏற்று அனைவரது வீடுகளிலும் தீபங்களை ஏற்றியும், ஒருசில இடங்களில் பட்டாசு வெடித்தும் ஒளியை பிரகாசிக்க செய்தனர். இந்நிலையில்,ஒளியால் மட்டுமே கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிக அதிகமாக, பரவலாக மக்களுக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு மற்றும் கூடுதல் பரிசோதனை தான் நல்ல பயன்களை தரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதையே ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நமக்கு அறிவுறுத்துவதாக அந்த பதிவில் முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…