சீன குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிக்கன் ரத்த ஊசி..!

சிறந்த ஆற்றல் மிக்க குழந்தைகளாக வளர்க்க சீனாவில் குழந்தைகளுக்கு சிக்கன் ரத்த ஊசி செலுத்தும் புதிய முறையை பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

தங்கள் குழந்தைகள் ஒரு ‘சூப்பர் கிட்’ ஆக வேண்டும் என்றும் ஒவ்வொரு துறையிலும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பக்கூடிய சீன பெற்றோர்கள் ‘சிக்கன் வளர்ப்பு முறை’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்னனர்.

சிக்கன் வளர்ப்பு முறை என்பது பெற்றோரின் முட்டாள்தனமான செயலாக கருதப்படுகிறது. இந்நிலையில் இதை சீன மக்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோழி இரத்த ஊசியை செலுத்துகிறார்கள். இதனால் கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை, உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் குணமாவதாக கருதுகின்றனர்.

இந்த கோழி இரத்த ஸ்டீராய்டுகள் குழந்தைகளை ஹைபராக்டிவிட்டி மூலம் கல்வியிலும், விளையாட்டுகளிலும் சிறப்பாகச் செயல்பட உதவும்.  தற்போது இந்த சிக்கன் பேபி வளர்ப்பு முறை அந்நாட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக சீனாவில் உள்ள பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ போன்ற நகரங்களில் இம்முறை பரவலாக உள்ளது.