குடியுரிமை சட்ட திருத்த விவகாரம்..!!!சென்னை பல்கலைகழகத்திற்குள் புகுந்தது தமிழ்நாடு காவல்துறை…!!! மாணவர்களை கைது செய்ய தீவிரம்..!!

  • இந்தியாவில் அறிமுகமான குடியுரிமை திருத்த மசோதாவிற்க்கு இந்திய அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில் இந்த போராட்டத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸ் நுழைந்துள்ளது. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு இந்திய அளவில் எதிர்ப்பு குறல் எழுந்து வந்த நிலையில் தற்போது இதற்கு  எதிராக  சென்னை பல்கலைகழக மாணவர்கள் காலை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திவரும் மாணவர்களை கைது செய்ய போலீஸ் தீவிரம் கட்டிவருகிறது. தற்போது காவல்துறை அதிரடியாக பல்கலைகழக வளாகத்திற்க்குள் நுளைந்துள்ளது.  ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, அசாம் இளைஞர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றாகபோராடியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kaliraj