சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது சாரண சாரணியர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
இன்று இந்தியா முழுவது 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தமிழக அரசு சார்பில் சென்னை, மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி : இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றினார். அதே போல தமிழகமெங்கும், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் வழக்கம் போல அந்தந்த மாவட்ட மேயர்தேசிய கொடியை ஏற்றினர்.
மேயர் பிரியா : அதே போல, சென்னையில், மேயர் பிரியா , சென்னை ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியை ஏற்றினார். அதற்கு முன்னதாக மாநகராட்சி பள்ளியின் தேசிய மாணவர் படை மற்றும் சாரண சாரணிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…