906 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. சென்னை மாநகராட்சி தகவல்.
இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை சுற்றுவட்டாரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அதனை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி பதிவிடுகையில், சென்னை மாநகராட்சியில் 906 மோட்டார் பம்புகள் மழைநீரை வெளியேற்ற தயார் நிலையில் இருக்கிறது. அதில், மோட்டார் பம்புகள் மூலம் 114 இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. என்றும்,
சென்னையில் பெய்த மழையால் இன்று காலை 2 மரங்கள் முறிந்து விழுந்தன. அது தற்போது அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.
சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…
சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…