சந்திராயன் 2 திட்டம் 98 சதவீத வெற்றி என்பது ஆராய்ச்சி குழுவின் முடிவு! எனது சொந்த கருத்து அல்ல! இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்!

சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் ஆர்பிட்டர் பகுதியிலிருந்து, விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ தரைப்பகுதியில் தரையிரக்கப்பட்டது. ஆனால் லேண்டர் நிலவின் தரைப்பகுதியை நோக்கி செல்லும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டர் சிக்னல் கிடைக்காமல் போனது. பின்னர், விக்ரம் லெண்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. தேடும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து கொண்டது. ஆனால் இறுதிவரை லேண்டர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சந்திராயன்-2 திட்டம் 98% வெற்றி அடைந்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். இதற்கு சில மூத்த ஆராய்ச்சியாளர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அவர்கள் குறிப்பிடும்போது சுய பரிசோதனை செய்யாமல் இவ்வாறு கருத்து தெரிவித்தால், மற்ற நாடுகள் மத்தியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நகைப்புக்குரியதாக மாறிவிடும். என கூறினர்.

இதற்கு பதில் அளித்த இஸ்ரோ தலைவர் சிவன், ‘ சந்திராயன்-2 ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு குழு இதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஆராய்ந்து வந்துள்ளது. அந்த குழு தான் சந்திராயன்-2 98% வெற்றி அடைந்துள்ளது என கருத்து தெரிவித்திருந்தது. அந்த கருத்தை நான் தெரிவித்தேன் என கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் இஸ்ரோ தலைவர் சிவன்.

மேலும், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சூரியனுக்கு ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை அனுப்ப உள்ளோம் எனவும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2021-இல்  செயல்படுத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…

33 seconds ago

சிங்கம் பட பாணியில் பிரஜ்வலை பிடிக்க வெளிநாடு செல்லும் சிறப்பு புலனாய்வு குழு.!

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…

6 mins ago

‘தேங்க்ஸ் தாத்தா ஃபார் தி சப்போர்ட்’ !! 103 வயதான சிஎஸ்கே ரசிகருக்கு தோனியின் அன்பு பரிசு !

CSK old Fan  : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை  கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…

1 hour ago

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த திருப்பதி பிரதர்ஸ்!

Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…

1 hour ago

வந்துட்டான்யா.. தமிழ்நாட்டில் நாளை முதல் கத்தரி வெயில் தொடக்கம்! ஒரு மாதம் கொளுத்தும்…

Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…

1 hour ago

எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை… கோவாக்சின் நிறுவனம் விளக்கம்.!

Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…

2 hours ago