விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு வரவேற்கத்தக்கது- இஸ்ரோ தலைவர்.!

விண்வெளித் துறையில் தனியார்மயத்தின் பங்களிப்பு குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் இன்று விளக்கம் அளித்தார். அதில்,  விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என கூறினார். விண்வெளித் துறையில் நாடு எதிர்நோக்கும் சீர்திருத்தத்தை அடைய தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதும், பல முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவை  நிலைநிறுத்தும் என கூறினார். இது விண்வெளி முயற்சிகளில் தனியார் துறையை கையாளுவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தேசிய நிறுவனமாக செயல்படும். இதற்காக இஸ்ரோ அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், … Read more

சந்திராயன் 2 திட்டம் 98 சதவீத வெற்றி என்பது ஆராய்ச்சி குழுவின் முடிவு! எனது சொந்த கருத்து அல்ல! இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்!

சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் ஆர்பிட்டர் பகுதியிலிருந்து, விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ தரைப்பகுதியில் தரையிரக்கப்பட்டது. ஆனால் லேண்டர் நிலவின் தரைப்பகுதியை நோக்கி செல்லும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டர் சிக்னல் கிடைக்காமல் போனது. பின்னர், விக்ரம் லெண்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. தேடும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து கொண்டது. ஆனால் இறுதிவரை லேண்டர் கிடைக்கவில்லை. இந்நிலையில் … Read more

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை! இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர்,  ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி இஸ்ரோ களம் இறங்கியது. மேலும், இந்திய விண்வெளி … Read more

சந்திராயன் 2  விண்கலம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 15 ந்தேதி  விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திராயன் 2  விண்கலம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 15 ந்தேதி  விண்ணில் செலுத்தப்படும் என்று  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்ப  திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.  விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 2  விண்கலம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 15 ந்தேதி  விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.