தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில்  ஒடிசா மேற்கு வங்க கடலோரப் பகுதிகளிலும் நிலவவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம், திருவாரூர், சென்னை போன்ற மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் நீலகிரி மற்றும் வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலும் மேற்கு மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.