அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் வேலூர், திருவள்ளூர், சென்னை , தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.