இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்புசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கோவாக்சின், கோவிஷில்டு என இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அவசரகால தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. மேலும், வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்திற்கும் அனுமதி வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய நிபுணர் குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், தற்பொழுது வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்புசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்தவகையில், தடுப்பூசி செலுத்தும் முதல் 100 பேரை 7 நாட்களுக்கு கண்காணித்து, மருந்தின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…