ஹீலியம் பலூனில் தனது வளர்ப்பு நாயை கட்டி பறக்கவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிக அளவில் மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்க கூடிய நிகழ்வுகள் மற்றும் தாங்கள் செய்யக்கூடிய வேடிக்கை தனமான காரியங்களை வீடியோவாக வெளியிடுகின்றனர். குறிப்பாக யூடியூபில் பலர் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள், தங்கள் வீட்டில் நடப்பவைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியை சேர்ந்த கவுரவ் சோன் எனும் யூடியூப் வைத்து நடத்தக் கூடிய இளைஞர் ஒருவர் தினமும் வித்தியாசமான வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
40 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளதோடு இவரது வீடியோக்களும் அதிக அளவில் பார்க்கப்பட கூடியவையாக இருக்கும். இந்நிலையில் அண்மையில் இவரது நாய்க்குட்டியை ஹீலியம் பலூனில் கட்டி பறக்க விட்டபடி வீடியோ ஒன்றை எடுத்து அதை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் மிருக வதை செய்வதாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த வீடியோவிற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, உரிய பாதுகாப்பு வசதியுடன் தான் நாய்க்குட்டி பறக்கவிட்டு வீடியோ எடுக்கப்பட்டதாகவும், தான் மிருக வதை செய்யவில்லை என்றும் அவர் விளக்கம் தெரிவித்ததுடன் இதன் மூலம் பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார். இருப்பினும் தெற்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் யூடியூபர் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…