3.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட மேலாளரை பொறி வைத்து பிடித்த சிபிஐ அதிகாரிகள்.!

3.5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட ராஜஸ்தானில் செயல்பட்டு வந்த பவர் பிளான்ட் மேலாளரை சிபிஐ அதிகாரிகள் பொறிவைத்து பிடித்து கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் பலோடி எனும் ஊரில் செயல்பட்டு வரும் நேஷனல் தெர்மல் பவர் ப்ளண்ட் கார்பரேஷனில் மேலாளராக பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ், கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குளறுபடியை சமாளிக்க 3.5 லஞ்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடிக்க 1 லட்சம் ரூபாயை லஞ்சமாக தருவதாக கூறி அவரை பொறியில் சிக்கவைத்து கைது செய்துள்ளனர்.

இது குறித்து, சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கையில், கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய மேலாளர் ஓம் பிரகாஷ் 3.5 லஞ்சம் கேட்டதாகவும், அதனால் அவரை பிடிக்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக கூறி, கையும் களவுமாக பிடித்ததாக கூறினர்.

மேலும், அவரை ஐபிசி சட்டம் 1988 பிரிவு 7 இன் படி கைது செய்துள்ளோம் எனவும் கூறினார். இவரை ஜோத்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தப்படுத்தினர்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

14 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

18 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

39 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

1 hour ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

1 hour ago

இன்னும் 4 போட்டி இருக்கு … பாத்துக்கலாம் ..- தோல்விக்கு பின் ருதுராஜ் !!

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…

1 hour ago