பயங்கரம்…படகு பாறைகளில் மோதி விபத்து..! 59 பேர் உயிரிழப்பு..!

இத்தாலிய கடற்கரை அருகே படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.  துருக்கியில் இருந்து ஐரோப்பாவிற்கு குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற மரப்படகு இத்தாலிய கடற்கரை அருகே விபத்துக்குள்ளாகி உடைந்ததில் 12 குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். துருக்கியில் இருந்து ஐரோப்பாவிற்கு குடியேறிய 140க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பாய்மரப் படகு தெற்கு இத்தாலிய கடற்கரை அருகே பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 140 பேரில் 59 பேர் உயிரிழந்தனர். … Read more

பரபரப்பு…திடீரென இடிந்து விழுந்த சாலையில் சிக்கிய நாய்..! வைரலாகும் வீடியோ..!

டெல்லியில் திடீரென சாலை இடிந்து விழுந்ததில் நாய் மற்றும் இரண்டு பைக்குகள் சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.  டெல்லியில் உள்ள சாலை திடீரென இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே புரம் பகுதியில் உள்ள சாலையின் குறுகிய பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெரிய பள்ளமானது அந்த இடத்தில ஏற்பட்டுள்ளது. சாலை ஓரம் படுத்திருந்த ஒரு நாயும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகளும் அந்த பள்ளத்தில் விழுந்தன. இந்த பரபரப்பு சம்பவம் சாலையின் அருகே … Read more

கோர விபத்து…நின்று கொண்டிருந்த பேருந்துகள் மீது லாரி மோதியது..! 8 பேர் பலி, 50 பேர் படுகாயம்..!

மத்தியப் பிரதேசத்தில் நின்றுகொண்டிருந்த 3 பேருந்துகள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தியில் நின்றுகொண்டிருந்த மூன்று பேருந்துகள் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சித்தியில் உள்ள மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகில் மூன்று பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த பேருந்துகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரணியில் கலந்து கொண்டு திரும்பும் மக்கள் … Read more

பயங்கரம்…டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து..! 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!

கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாடு : கிருஷ்ணகிரி மாவட்டம் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து காவேரி பட்டினம் அருகே உள்ள எர்ரஹள்ளி பகுதியில் நடந்துள்ளது. காவேரிப்பட்டினம் அருகே எர்ரஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 மாத … Read more

தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ விபத்து.! ஒருவர் பலி..!

விருதுநகரில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   விருதுநகரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டிச் தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் உள்ளன. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முருகன் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த முருகனின் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் போராட்டம் … Read more

கார் கேரேஜில் தீ விபத்து..! பல சொகுசு கார்கள் எரிந்து நாசம்..!

பெங்களூரில் உள்ள கார் கேரேஜில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல சொகுசு கார்கள் எரிந்து நாசமானது. பெங்களூரு, கஸ்தூரி நகரில் உள்ள கேரேஜ் தீ விபத்து ஏற்பட்டதில் பல வகைப்பட்ட உயர்ரக கார்கள் தீயில் சேதம் அடைந்தன. மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கஸ்தூரி நகரில் சிஎம்ஆர் சட்ட கல்லூரிக்கு அருகே உள்ள கார் கேரேஜில், தொழிலாளர்கள் பைக் ஸ்டார்ட்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, மின் கசிவு (ஷார்ட் சர்க்யூட்) ஏற்பட்டு தீ … Read more

வெடி வைத்து கிணறு தோண்டியதில் 3 பேர் உயிரிழப்பு..!

தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள ராம்நகரில் தனியார் நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வந்துள்ளது. இந்த பணியில் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் என்பாரின் குழு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கிணறு தோண்டுவதற்காக கிணற்றிற்கு அடியில் வைக்கப்பட்டுள்ள வெடி எதிர்பாராமல் வெடித்துள்ளது. இந்த விபத்தில் அரவிந்த் மற்றும் ஆசீர் சாம்சன் சம்பவ இடத்திலேயே … Read more

2 மகன்களின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்..! தானும் தற்கொலை செய்து கொண்ட துயரம்..!

ஒடிசாவில் பெண் ஒருவர் தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ள துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்புவா பகுதியில் உள்ள துருகுலியா கிராமத்தில் கியானபிரபா நாயக் என்ற பெண் அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு நான்கு வயதான ஜான்சன், இரண்டு வயதான சாந்தனு மற்றும் ஆறு வயது மகள் தபஸ்வினி என்று மூன்று … Read more

ஜேஏபி தலைவர் சென்ற வாகனம் விபத்து..! 11 பேர் காயம்..!

ஜன்அதிகார் கட்சி (ஜேஏபி) தலைவர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 11 பேர் காயமடைந்தனர். பீகாரின் தலைவரும் ஜன்அதிகார் கட்சியின் (ஜேஏபி) தலைவருமான பப்பு யாதவ், சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 11 பேர் காயமடைந்தனர். ஜன்அதிகார் கட்சி தலைவர் முபாரக்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து சரண் மாவட்டத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அர்ராவிலிருந்து பாக்சர் செல்லும் நெடுஞ்சாலையில் பப்பு யாதவ்வின் வாகன தொடரணியில், அதிகமான பாரங்கள் ஏற்றப்பட்ட டிரக் தொடரணியை முந்தி சொல்ல முயன்ற … Read more

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..! வெளியாகிய விடியோவால் பரபரப்பு..!

மகாராஷ்டிராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள எம்ஐடிசி (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்ஐடிசியில் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனம் மல்லக் சிறப்பு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் தொழிற்சாலையில் உட்பகுதியில் இருந்து பயங்கர வெடிப்புகளும் ஏற்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் … Read more