CAA Act : ஆளும் பாஜக அரசால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 வருடங்கள் கழித்து நேற்று நாட்டில் அமல்படுத்தப்படுவதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட போதே, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் உயிரிழப்புகளும் நேரும் நிலை உருவானது. இந்நிலையில், நேற்று மத்திய அரசு மீண்டும் இதனை கையிலெடுத்து இருப்பது எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் சாராத பல்வேறு அமைப்புகள் மத்தியில் எதிர்ப்புகளை உண்டாக்கியுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநில முதல்வர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நேற்று முதல் அசாம் மாநிலத்தில் மாணவர் சங்கத்தினர் ஆரம்பித்துள்ளனர். அசாம் மாநிலத்தில், குவஹாத்தி , கம்ரூப், பார்பேட்டா மற்றும் திப்ருகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இன்று (செவ்வாய்கிழமை) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டங்கள் குறித்து அசாம் காவல்துறை கூறுகையில் , போராட்டங்களின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், சேதாரத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட போராட்ட அமைப்புகளிடம் இருந்து அபராத தொகை வசூல் செய்யப்படும் என்றும் அசாம் காவல்துரை அறிவித்துள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…