செங்கல்பட்டு: மாமல்லபுரத்தை அடுத்த மனமை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் எதிர்திசையில் வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 3 பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் 2 பெண் குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.