அன்று முதல் இன்று வரை… பட்ஜெட் குறித்த ஓர் அலசல்… பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..

  • இந்தியாவில் ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் குறித்த சிறப்பு தொகுப்பு.
  • அன்று முதல் இன்று வரை அனைத்தும் கீழே.

இந்தியாவில் முதன்முறையாக  பட்ஜெட்  1860-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  7-ம் தேதி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி தான் அறிமுகம் செய்தது. அப்போது இந்திய நிதி கவுன்சிலின் உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் என்பவரது  ஆலோசனையின் பேரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வரை இந்த நிகழ்வு ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். இது தொடர்பான விரிவான தகவலை விரிவாக காணலாம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்:

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முதலாக 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அப்போது நிதியமைச்சராக இருந்த  தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் செட்டி ஆவார்.

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்:

இந்திய வரலாற்றில் அதிகபட்சமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் பட்டியளில்,  10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொராஜ் தேசாய் முதலிடத்தில் . இவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில்  ப.சிதம்பரம் 9 முறையும், மூன்றாவது இடத்தில் பிரனாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட்டை  தாக்கல் செய்துள்ளனர். இதேபோல்,  மன்மோகன் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா இருவரும் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

தனது பிறந்த நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்தவர்:

லீப் வருடத்தில் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்த மொராஜ் தேசாய் 1964 மற்றும் 1968 என இரண்டு முறை தனது பிறந்தநாள் அன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட்டின் நேரத்தை (ம) மாதத்தை மாற்றியவர்கள் :

கடந்த  1999-ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் சரியாக  மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த பாரம்பரிய முறையை யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு அதிரடியாக  மாற்றினார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதத்தின் முதல் நாளே பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார் இதேபோல், மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மேலும் 92 வருடங்களாகப் பின்பற்றி வந்த ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட அறிவிப்பை வெளியிடப்பட்டார்.

அல்வா கிண்டும் பழக்கம்:

சரியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு பத்து  நாட்களுக்கு முன்பு அல்வா கிண்டும் விழா நடைபெறும். அதன் பின்பு தான் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள்  அச்சிடப்படும். அல்வா கிண்டிய பிறகு ரகசியம் காக்கும் நோக்கத்தில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட யாரும் வீட்டிற்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பட்ஜெட் அறிக்கையின் அளவு:

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் 39 பத்திகளாக மட்டுமே இருந்த பட்ஜெட் அறிக்கை இருந்தது. பின்னர் அது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கை 253 பத்திகளாக இருந்தது. 2 மணி நேரம் 10 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்த வருடம் பட்ஜெட் எப்படி வரப்போகும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

Kaliraj

Recent Posts

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

3 mins ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

8 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

12 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

13 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

13 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

13 hours ago