Breaking: துருக்கி, சிரியா பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 4000-ஐ கடந்தது.!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நாடே குலுங்கியது, கட்டடங்கள் இடிந்து விழுந்து ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். துருக்கியில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8, 7.6 ,மற்றும் 6 என அடுத்தடுத்து ஏற்பட்டது.

தற்போது இந்த நிலநடுக்கத்தில் 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மீட்புக்குழுவினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர். பல நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவி வருகின்றனர், இந்தியா சார்பில் 2 மீட்புக்குழுக்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்ள்ளன.

author avatar
Muthu Kumar

Leave a Comment