#Breaking:பிரபல கடையில் கொள்ளைப்போன நகைகள் சுடுகாட்டில்… கண்டுபிடித்து கெத்து காட்டிய போலீசார்!

வேலூர்:பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும்,நகைக்கடையை சுற்றி உள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

அந்த கொள்ளையன் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக்கவசம் ஆன சிங்கம் பொம்மை முககவசத்தை அணிந்தபடி சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிப்பதற்காக கையில் ஸ்ப்ரே பாட்டில் உடன் இருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த புகைப்படத்தில் இருப்பவரின் அங்க அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்,இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில்,கொள்ளை சம்பவம் தொடர்பாக குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டீகா ராமன் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற நாளில் அப்பகுதியை சுற்றி பதிவான செல்போன் எண்களைக் கொண்டு ராமன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களில் ராமனும் ஒருவர் என்பது தெரிய வந்ததையடுத்து,அதன்பின்னர்,மேலும் விசாரணை மேற்கொண்டதில் நகைகள் இருக்கும் இடம் குறித்து அவர் முன்னுக்கு பின்னாக தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,கொள்ளையில் ஈடுப்பட்ட ராமன் குறிப்பிட்ட அனைத்து இடங்களையும் காவல்துறையினர் கடப்பாரை உள்ளிட்டவற்றைக் கொண்டு தோண்டி காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.

அதன்படி,உத்திரகாவடி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள சுடுகாட்டு பகுதியில் நகைகள் புதைக்கப்பட்டிருப்பத்தை காவல்துறையினர் உறுதி செய்த நிலையில்,வேலூர் மாவட்ட எஸ்.பி.ராஜேஸ் கண்ணா அவர்களின் தலைமையிலான காவலர்கள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று புதைக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகளை தற்போது மீட்டுள்ளதாகவும், அந்த நகைகள் உருக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

4 mins ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

5 mins ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

17 mins ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

40 mins ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

55 mins ago

ரீ ரிலீஸான தீனா…திரையரங்கிற்குள் பட்டாசு கொளுத்திய அஜித் ரசிகர்கள்!

Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…

1 hour ago