தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வி.கே.சசிகலாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேற்று சந்தித்து பேசினார். சசிகலாவை அதிமுகவின் இணைக்க வேண்டும் என ஒருபக்கம் ஆதரவு, மறுபக்கம் எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில், நேற்று திருச்செந்தூர் சென்றிருந்த சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் சந்தித்து பேசினார். தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே சசிகலாவை சேர்க்கக்கோரி அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சி தலைமை நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட எஸ்.முருகேசன், வைகை கருப்புஜி, எஸ். சேதுபதி ஆகியோர் கட்சிக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணங்களால் தேனி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த 23 பேர், தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும், தேனி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மேலும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் சகோதரர் உள்பட மொத்தம் 37 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
IPL2024: மழை காரணமாக கொல்கத்தா , குஜராத் அணி மோத இருந்த போட்டி டாஸ் போடாமல் கைவிடப்பட்டது. இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் , குஜராத்…
சென்னை : 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்,…
சென்னை : ஈரான் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு இந்தியா கைபற்றியுள்ளது. ஈரானின் மூலோபாய சாபஹர் துறைமுகத்தை மேம்படுடைத்த இந்தியா 10 ஆண்டுகளுக்கு டெண்டர் எடுத்துள்ளதாக மத்திய நீர்வழிகள்…
Amit Shah : இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து கொண்டு வரும் நிலையில், பங்குச் சந்தை உயரப்போகிறது என என்.டி.டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமித் ஷா…
Japanese lifestyle -ஜப்பானியர்களின் ஆரோக்கியமான ஆயுளுக்கு என்ன காரணம் என்பதை பற்றி இப்பதிகள் தெரிந்து கொள்வோம். பொதுவாக அதிக வயதுடன் வாழ்வதில் ஜப்பானியர்கள் தான். அதுவும் 85…
சென்னை : லியோ படத்தை விட தக் லைஃப் திரைப்படம் வெளிநாட்டு உரிமைகள் அதிக கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோலிவுட் சினிமாவில் இதுவரை…