#Breaking:”தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை”- மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னை:வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:

“தமிழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த இரண்டு நபர்கள்,திருச்சியை சேர்ந்த ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது.முதற்கட்ட தகவலின்படி, அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை.அவர்கள் நல்ல முறையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். எனினும், அவர்களிடம் எடுத்த மாதிரியை மேற்கொண்டு மரபியல் ரீதியான  பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

குறிப்பாக,தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை, எனவே,மக்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம்.இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 7.4 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதில் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களுக்கு 2.47 கோடி முதல் தவணை தடுப்பூசியும்,45 முதல் 49 வயது வரை உள்ளவர்களுக்கு 1.23 கோடி தடுப்பூசியும்,60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 55 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும்,இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

10 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

11 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

47 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago