1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக்தில் ஊரடங்கு 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளி திறப்பது குறித்து முடிவுவெடுக்கப்படும் என கூறினார்.
பிற மாணவர்களுக்கும் பள்ளி திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் 1 முதல் 5 வரை வகுப்புகள் தொடங்கலாம் என்றும் சிலர் 1 முதல் 8 வரை வகுப்புகளை தொடங்கலாம் எனவும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
எனவே, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான அறிக்கையை இன்று முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா? அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பதா? என்பதற்கான கூட்டம் நடந்த பிறகு மருத்துவர் நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனையில் அடிப்படையில் கலந்தாலோசித்து எப்போது பள்ளி திறப்பது என்ற முடிவு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…