தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடக்கம்.
வாகன விபத்துகளால் கை கால்களில் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்பு புற்றுநோய் மற்றும் பல விதங்களில் ஏற்படக்கூடிய எலும்பு பாதிப்பால், பலருக்கும் எலும்புகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதுண்டு. அதாவது, எலும்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு பாதிக்கப்பட்ட எலும்பை நீக்கி விட்டு, புதிய எலும்பை பொருத்த வேண்டும்.
அந்த வகையில், தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்க சென்னை கல்வி மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், தென் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கூட எலும்பு வங்கி இல்லாத நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்முறையாக எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள எலும்பு வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…