அப்பா – அம்மா ஆக போகும் பாலிவுட் ஜோடிகள்…பிரபலத்தின் திருமணத்திற்காக கோவா ட்ரிப்.!

பிரபல பாலிவுட் ஜோடிகளான நடிகர் வருண் தவான் மற்றும் அவரது மனைவி நடாஷா தழல் ஆகியோர் விரைவில் அம்மா – அப்பா ஆக போவதாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் அவர்களது சக பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஜோடி இன்று மும்பை நிலையத்திற்கு வருகை தந்தனர். நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர்கள் இன்று வெளியே வந்துள்ளனர், அது ஏன் தெரிவித்ததும் ரசிகர்களை குஷிப்படுத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

அதாவது, நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி திருமணம் பிப்ரவரி 21 ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அவர்களது திருமணத்திற்காக வருண் மற்றும் நடாஷா மும்பையில் இருந்து கோவாவிற்கு செல்வதாக தெரிவித்தனர். இதன் மூலம், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருணம் குறித்த செய்தி உறுதியாகியுள்ளது.

அந்த விஷயத்திற்கு முழு அனுமதி கொடுத்த காதலன்? உற்சாகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

மேலும், பல பிரபலங்களும் ரகுல் ப்ரீத் சிங் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் வருண் தவான் கடைசியாக நித்தேஷ் திவாரியின் ‘பவால்’ படத்தில் நடித்திருந்தார். விரைவில் இயக்குனர் அட்லீயின் தமிழ் படமான தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடிக்கவுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment