இயக்குனரும் நடிகையுமாகிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தற்பொழுது ப்ளூ இங்க் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை எனும் வாழ்வியல் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நடிகை மற்றும் இயக்குனர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகையாக அல்லது இயக்குனராக பிரபலமானதை விட இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக தான் அதிகம் பிரபலம் ஆனார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் என பல்வேறு தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவரது படங்கள் அனைத்துமே ஒரு தாயின் மன அழுத்தத்தை குறித்ததாகவோ அல்லது காதல் சம்பந்தமாகவும் அதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதியவர்களின் பிரச்சனை, பெண்களின் பிரச்சனை என வாழ்வியல் சம்பந்தமானதாக தான் இருக்கும். அது போல தற்பொழுது இவர் இயக்கத்தில் ப்ளூ இங்க் எனும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தலைப்பாக இந்த நீலம் சிவப்பு எனவும் வைத்துள்ளார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து பேச இருப்பதாகவும், இந்தப் படத்திற்கான நடிகர் நடிகை தேர்வு தற்போது நடந்து வருவதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…