Categories: Uncategory

குலசை முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா பக்த்தர்கள் கூட்டம் அலை மோதியது

குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கொடை விழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா நேற்று முன்தினம் இரவில் மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து வில்லிசை நடந்தது. விழாவின் சிகர நாளான நேற்று ஆடி கொடை விழா நடந்தது. காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு மகுடம், கும்பம் திருவீதி எழுந்தருளல், வில்லிசை நடந்தது.
மாலை, இரவில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் வில்லிசை, சிறப்பு அலங்கார தீபாராதனை, கும்பம் திருவீதி எழுந்தருளல் நடந்தது. மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இன்று, மஞ்சள் நீராட்டு விழா

விழாவின் நிறைவு நாளான இன்று (புதன்கிழமை) காலையில் சிறப்பு மகுடம், கும்பம் திருவீதி எழுந்தருளல், வில்லிசை நடக்கிறது. மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், தக்காரும் உதவி ஆணையருமான அன்னக்கொடி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
Castro Murugan
Tags: #Thoothukudi

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago