Categories: Uncategory

‘பேஸ்புக்’ இந்தியா முதலிடம்!!

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக சமீபத்தில் வெளிவந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 241 மில்லியனாக உயர்ந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையான 240 மில்லியனை விட அதிகமாக ஒரு மில்லியன் இருப்பதால் இந்தியா முதலிடத்தை பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் 201 மில்லியன் பயனாளிகள் மட்டுமே இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் பயனாளிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 2 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜூலை 13ஆம் தேதி தி நெக்ஸ்ட் வெப் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி இந்தியாவில் 241 மில்லியன் பயனாளிகள் ஃபேஸ்புக்கை தவறாமல் பயன்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க பயனாளிகளான 240 மில்லியனை ஒப்பிடும்போது இந்திய பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2 பில்லியன் என்ற அறிவிப்பு வந்த இரண்டு நாட்களிலேயே அமெரிக்காவை விட இந்தியாவில் ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற தகவல் வெளிவந்துவிட்டது. 2017ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் ஆக்டிவ் பயனாளிகள் அமெரிக்காவை விட இந்தியாவில் இரு மடங்கு என்ற உண்மையையும் தி நெக்ஸ்ட் வெப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் பயனாளிகள் கடந்த ஆறு மாதங்களில் 27% அதிகரித்துள்ளதாகவும், அதாவது முந்தைய எண்ணிக்கையை விட 50 மில்லியன் அதிகம் என்றும், ஆனால் அமெரிக்காவில் ஆக்டிவ் பயனாளிகளின் எண்ணிக்கை 12% மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Castro Murugan
Tags: technology

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

2 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

7 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

7 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

7 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

8 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

8 hours ago