பதினெட்டு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண்போம் என்றார் டி.டி.வி. தினகரன்.
திருச்சியில் செப். 19-இல் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை மாலை தினகரன் காரில் புறப்பட்டார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு தினகரன் அளித்த பேட்டி:
18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை.
சட்டப்பேரவையை கூட்டி எடப்பாடி கே. பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
எங்களுக்கு, மேலும் 10-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே, எடப்பாடி தலைமையிலான அரசு கவிழ்வது உறுதி. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு தமிழக ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார் தினகரன்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…