Categories: Uncategory

உலக நாடுகளை அதிர வைக்கும் நாடு !அணு குண்டு சோதனையில் உயிரிழப்புகள் நடந்ததாக குற்றச்சாட்டு ..

இன்று உலக நாடுகள் அனைத்துமே பயப்படும் ஒரே ஒரு நாடு தான்.அது தான் வடகொரியா  .தனது உருவத்தில் வேணும் என்றால்  சிறிதாக இருந்தாலும் பல வல்லரசு நாடுகளையே நடுங்க வைக்கிறது .காரணம் அது வைத்திருக்கும் அணு ஆயுதங்கள். வடகொரியாவில் அணுஆயுத சோதனை நடைபெற்ற கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் பலியானதாக ஜப்பான் நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அணுஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி ஆறாவது முறையாக மிகப்பெரிய நிலத்தடி அணுகுண்டு சோதனையை அந்நாடு நடத்தியது. இந்த சோதனை நடந்து முடிந்த சில நாட்களில் அணுசோதனை நடைபெற்ற புங்கியாரி என்ற இடத்தில் உள்ள சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 100 தொழிலாளர்கள் பலியாகினர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் நிறுவனமான அசாஹி, செப்டம்பர் 3-ம் தேதி, வடகொரியா 6.3 ரிக்டர் அளவிலும் அதைத் தொடர்ந்து 4.3 ரிக்டர் அளவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகொண்ட இரு அணுகுண்டுகளைச் சோதனை செய்துள்ளதாக கூறியுள்ளது. அவை ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைக் காட்டிலும் 8 மடங்கு சக்தி வாய்ந்தவை. மேலும் 120 கிலோ டன் எடைகொண்டது.

இதனால் புங்கியாரி மலைப் பகுதியில் அணுகுண்டுச் சோதனை நடத்தும் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் 100 பேர் பலியான நிலையில், அதனை தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளின் போது மீண்டும் ஒருமுறை சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேலும் 100 பேர் என மொத்தம் 200 பேர் பலியாகியுள்ளதாக ஜப்பான் செய்தி நிறுவனமான அசாஹி தெரிவித்துள்ளது.  தரைக்கு அடியில் நடத்தப்படும் அணுகுண்டுச் சோதனைகள், மலைப் பகுதிகளில்  நிலச்சரிவை ஏற்படுத்தும் என வடகொரிய அதிபர் கிம்மை அந்நாட்டு புவியியல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதையும் மீறி அவர் அணுகுண்டுச் சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளார். இதன் காரணமாக தற்போது அப்பகுதியில் கதிர்வீச்சு வெளியாகியுள்ளதாக என்று ஜப்பான் நிறுவனம் கூறியுள்ளது.இந்நிலையில் இது கூறித்து வட கொரியா  எந்த விதமான கருத்துகளையும் கூறவில்லை .

Dinasuvadu desk
Tags: world

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

2 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

5 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

5 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

6 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

6 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

6 hours ago