Categories: இந்தியா

குறுஞ்செய்தியில் காலக்கெடு !ஆதார் இணைப்பு விவகாரம்…

                             
ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை கூறி வருகிறது. வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெற ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதார் கட்டாய நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதுபோலவே, தனிநபர் ரகசியத்தை காப்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவு தனிநபர் உரிமைக்கு எதிரானது கூறியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதார் எண் இணைக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஏ.கே சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி விஸ்வநாதன் கூறுகையில், ”ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்கியதன் மூலம் வங்கிகளும், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் மக்களிடம் பீதியை கிளப்புகின்றன. உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறி கணக்கில்லாத அளவு மொபைல் போன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். இதனால் மக்கள் கடுமையான பீதிக்கு ஆளாகின்றனர்” எனக் கூறினார்.
தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2018 பிப்ரவரி 6-ம் தேதியும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2017 டிசம்பர் 31-ம் தேதியும் கடைசி தேதி என்பதை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என அவர்கள் கூறினர்.
அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், அரசியல் சாசன அமர்வு இந்த ஆதார் விவகாரம் குறித்து இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் இறுதித் தீர்ப்பை அளித்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
Dinasuvadu desk
Tags: india

Recent Posts

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

3 mins ago

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

38 mins ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

1 hour ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

2 hours ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

3 hours ago