இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பறவை காய்ச்சசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் இந்த மாநிலங்களில் 1200 பறவைகள் இறந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சண்டிகர் மற்றும் மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்றும், இந்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் மேலும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதில், கோழி பண்ணைகள் அல்லது கடைகளில் எதையும் அல்லது எந்த இடத்தையும் தொடுவதைத் தவிர்க்கவும். எதையும் தொட்ட உடனேயே கைகளை கழுவ வேண்டும். சுமார் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கோழியை சமைக்கவும். இறைச்சி அல்லது முட்டைகளை சாப்பிடுவதில் தவறு செய்ய வேண்டாம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வைரஸ் சமையல் வெப்பநிலையில் அழிக்கப்படுகிறது. இறைச்சி அல்லது முட்டைகளை மற்ற உணவு பொருட்களிலிருந்து தனித்தனியாக வைக்க வேண்டும்.
பெரும்பாலும் அரை கொதி அல்லது அரை வறுத்த முட்டையை சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பறவை காய்ச்சலைத் தவிர்க்க உடனடியாக இந்த பழக்கத்தை மாற்றவும். கோழி வாங்கும் போது முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் வாங்கவும், சுத்தமான கோழியை மட்டும் வாங்க வேண்டும்.
நீங்கள் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுக்கு ஆளானால், உங்களுக்கு இருமல், வயிற்றுப்போக்கு, சுவாச பிரச்சினைகள், காய்ச்சல், தலைவலி, தசை வலி, அமைதியின்மை, மூக்கு ஒழுகுதல் அல்லது தொண்டை வலி ஏற்படலாம்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…