Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இளம் பிரமுகர் சவுரப் குமார் என்பவர் நேற்று இரவு பாட்னா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று பர்சா பஜார் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சவுரப் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சவுரபை சரமாரியாக சுட்டனர். இதில் சவுரபின் தலை மற்றும் கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளது. உடன் இருந்த முன்முன் குமார் எனும் நண்பரும் இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தார்.
துப்பாக்கியால் சுட்ட கும்பல் தப்பியோடிய பின்னர், உடனடியாக சவுரப் குமார் மற்றும் அவரது நண்பர் முன்முன் குமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சவுரப் குமார் ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்முன் குமார் தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவரது உடல்நிலை சீராகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சி பிரமுகர் மீதான இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து பாட்னா புன்புன் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…