60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று கேட்கும் பிக்பாஸ்.!திணறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!

பிக்பாஸ் வீட்டில் 60 நாட்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் திக்கி திணறுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று ரசிகர்களுக்கு கூறுமாறு பிக்பாஸ் கூறுகிறார்.

அதற்கு ஷிவானி,கேபி ,ஆஜீத்,சோம் ஆகியோர் என்ன கூறுவது என்று திணறுகின்றனர் .ரம்யாவிடம் இந்த வாய்ப்பு மறுபடியும் வராது ரம்யா என்றும் ,இந்த மாதிரி பேசுறதுக்கு வேற வாய்ப்பு கிடைக்குமா என்று சோமிடமும் ,60 நாட்கள் எதுவே ஞாபகம் வரவில்லையா என்று சோமிடமும் பிக்பாஸ் கேட்கிறார்.மேலும் ஜித்தன் ரமேஷ் கொஞ்சம் நேரம் எடுத்துக்கலாமா பிக்பாஸ் என்று கேட்க,அனிதா நான் அனைவருக்கும் ஹெயர் ஸ்டைல் செய்து கொடுத்ததாக கூறுகிறார் .மொத்தத்தில் வீட்டுக்குள்ள சண்டைய மட்டும் நடத்திற்று இருக்காங்க ,சொல்ற அளவுக்கு எதுவும் யாரும் பண்ணவில்லை என்று திணறுவதில் தெரிகிறது.