உனக்காவது ஷிவானி இருக்கா, நான் எல்லாம் யார்கிட்ட போய் பேசுறது – ஆரி.!

உனக்காவது ஷிவானி இருக்கா, நான் எல்லாம் யார்கிட்ட போய் பேசுறது என்று ஆரி கேட்க பாலாஜி அவரை கட்டி அணைத்து மன்னிப்பு கேட்கிறார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 63 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதில் ஷிவானி அதிகம் நேரம் பாலாஜியுடன் செலவிடுவதும் ,அதனால் பாலாஜிக்கு காதல் கண்ணை மறைப்பதாகவும் ஆரி கூறியதும் வீட்டினுள் பரப்பரப்பாக பேசப்பட்டது .இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில்,ஆரி பாலாஜிக்கு சில அறிவுரைகளை கூறுகிறார்.

அதாவது,உனக்கு ஷிவானி மேல் அன்பு இருக்கிறது சரிதான்.அதை விளையாட்டில் கொண்டு வரக்கூடாது,ஒருத்தருக்காக ஒருத்தர் விளையாடுவது , காப்பாற்றுவது ,அன்பு வைப்பது எதற்கு என்று கேட்கிறார்.அதற்கு பாலாஜி உங்களுக்கும் , எனக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் பேச ஆள் இருக்காது என்று கூற உனக்காவது ஷிவானி இருக்கா நான் எல்லாம் யார்கிட்ட போய் பேசுறது சொல்லு என்று ஆரி கூறுகிறார் . அப்போது பாலாஜி அவளும் ஒரு கட்டத்திற்கு மேல் பேக் பண்ணி அனுப்பி விடுவார்கள் என்று கூறி விட்டு ஆரியிடம் மன்னிப்பு கேட்டு கட்டி அணைத்து கொள்வதோடு புரோமோ முடிவடைகிறது.