இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்.! நீதிமன்ற உத்தரவால் திரையுலகினர் அதிர்ச்சி.!

எந்திரன் பட விவகாரத்தில் ஆஜராகாத காரணத்தால் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இவர் பல பிரமாண்ட படங்களை இயக்கியிருந்தாலும் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி சாதனையை படைத்து இவரின் புகழை உச்சத்தில் எடுத்து சென்ற திரைப்படம் என்றால் அது எந்திரன் தான்.

இந்த திரைப்படம் திருட்டு கதை என்று கூறி ஷங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது .அதற்காக அவரை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் இயக்குனர் ஷங்கர் பத்து ஆண்டு காலமாக ஆஜராக காரணத்தால் தற்போது எழும்பூர் நீதிமன்றம் இயக்குனர் ஷங்கர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.