கொரோனாவால் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்பது தவறான செய்தி!

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் அதிகரித்து வந்தாலும் தமிழகத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களை விட குணமாகியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இதற்கு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள்,  தமிழகத்தில் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன, கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி மிகவும் தவறானது.

மருத்துவர்கள் இறப்பு குறித்த தகவல்களை இந்திய மருத்துவர் சங்கமே மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிபவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தவறான தகவல்களை வெளியிட்டு மருத்துவர்களின் மன உறுதியை சீர் குலைக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறி உள்ளார்.

Rebekal

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

3 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

9 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

10 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

11 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

12 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

13 hours ago