ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபச்சாரம்.தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்த முக்கிய பிரமுகர்கள்.
கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் களத்தில் இறங்கிய காவல்துறையினர்.
கரூர் மாவட்டத்தில் செங்குந்தநகரம் என்ற பகுதி உள்ளது.இப்பகுதியில் அதிகளவு டெக்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன.இதனால் அப்பகுதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு அடிக்கடி கார்களில் முக்கிய பிரமுகர்கள் விஐபிகள் வந்து சென்றவாறு இருந்துள்ளனர்.
ஆயுர்வேத சிகிச்சை அடிக்கடி செய்ய வேண்டியது இல்லையே, ஏன் இவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக காவல்துறையினர் அந்த ஆயுர்வேத மையத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அங்கிருந்த சில பெண்கள் காவல்துறையினரை கண்டதும் அரைகுறை ஆடையுடன் தப்பு ஓடியுள்ளனர்.
இந்த மையத்தை நடத்தி வந்த தர்மபுரியை சேர்ந்த ரமேஷ்குமார் ,ஈசநத்தம் சின்ன அழகு ஆகியோரும் தலைமறைவாகியுள்ளனர்.இந்நிலையில் அந்த மையத்தில் ஒரு பகுதியில் பதுங்கி இருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரிடம் நடத்திய விசாரணையில் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபசாரம் நடந்து வந்ததாகவும், இதற்காக பல முக்கிய புள்ளிகள் அங்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்ததாகவும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…