ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபச்சாரம்.தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்த முக்கிய பிரமுகர்கள்.
கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் களத்தில் இறங்கிய காவல்துறையினர்.
கரூர் மாவட்டத்தில் செங்குந்தநகரம் என்ற பகுதி உள்ளது.இப்பகுதியில் அதிகளவு டெக்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன.இதனால் அப்பகுதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு அடிக்கடி கார்களில் முக்கிய பிரமுகர்கள் விஐபிகள் வந்து சென்றவாறு இருந்துள்ளனர்.
ஆயுர்வேத சிகிச்சை அடிக்கடி செய்ய வேண்டியது இல்லையே, ஏன் இவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக காவல்துறையினர் அந்த ஆயுர்வேத மையத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அங்கிருந்த சில பெண்கள் காவல்துறையினரை கண்டதும் அரைகுறை ஆடையுடன் தப்பு ஓடியுள்ளனர்.
இந்த மையத்தை நடத்தி வந்த தர்மபுரியை சேர்ந்த ரமேஷ்குமார் ,ஈசநத்தம் சின்ன அழகு ஆகியோரும் தலைமறைவாகியுள்ளனர்.இந்நிலையில் அந்த மையத்தில் ஒரு பகுதியில் பதுங்கி இருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரிடம் நடத்திய விசாரணையில் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபசாரம் நடந்து வந்ததாகவும், இதற்காக பல முக்கிய புள்ளிகள் அங்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்ததாகவும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…