வங்கியில் திருட்டு முயற்சி – துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பாதுகாவலர்கள் ..!

பீகாரில் வங்கி முன் நின்றிருந்த பண வண்டியில் திருட்டு முயற்சி செய்த இரண்டு மர்ம நபர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பாதுகாவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் முஸாபார்பூரில் உள்ள சென்ட்ரல் வங்கியின் வெளியில் பணத்துடன் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். அப்பொழுது வண்டியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதில் ஒருவர் கீழே இறங்கி வந்து பணம் இருக்க கூடிய வண்டியை நோக்கி வந்த அந்த நபர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார்.

உடனே சற்றும் யோசிக்காமல் நிலைமையை புரிந்து கொண்ட பாதுகாவலர்கள் உடனே துப்பாக்கியால் சுட்டனர். இதனால், குண்டடிபட்டு உயிர்பிழைத்தால் போதும் என்று உடனே மோட்டார் சைக்கிளில் இரு மர்ம நபர்களும் ஏறி தப்பித்துள்ளனர்.  துப்பாக்கி வைத்து மிரட்டியும் சற்றும் அச்சம் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக விரட்டியடித்த பாதுகாவலர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.