வீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், வீட்டிற்குள்ளே இருப்பது மிக கடினமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கூறினார்.

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பலரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இந்த தளர்வு, விளையாட்டு துறைக்கு அளிக்கப்படாத நிலையில், விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்-பவுலராக இருப்பவர், ரவிச்சந்திர அஸ்வின். பல கடினமான சூழலில் தனது அற்புத பந்துவீச்சில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். தற்பொழுது அவர் வீட்டிலே முடங்கி இருந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி சத்குருவுடன் ஆன்லைன் இன்டர்வியூ ஒன்றில் ஒன்றில் தொகுப்பாளராக செயல்பட்டார் அப்பொழுது அவரிடம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார் அஸ்வின்.

மேலும் நிகழ்ச்சியின்போது அஸ்வின், வெளியில் சென்று போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடாமல் வீட்டில் உள்ளது மிகவும் கடினமாக இருப்பதாகவும், போட்டிகளில் பங்கேற்று விளையாட மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.