கடந்த 2009-ம் ஆண்டு நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில் இலங்கை ராணுவத்தின் 58-ஆவது பிரிவுக்கு தலைமை வகித்த சாவேந்திர சில்வா, போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும், மனிதாபிமானப் பொருள்களையும் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இவர் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டும் கடந்த 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. போரின்போது, ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்குக் குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல முயன்றபோது அதைத் தடுத்தவர் சவேந்திர சில்வா என்ற குற்றச்சாட்டு தற்போது வரை இருக்கிறது. போருக்குப் பின் சவேந்திர சில்வாவை இலங்கை அரசு ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர துணைத் தூதராக நியமித்தது. ஆனால், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இலங்கையின் ராணுவத்தின் தளபதியாக சவேந்திர சில்வா இருந்து வருகிறார்.இந்நிலையில், அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள சவேந்திர சில்வா திட்டமிட்டிருந்தார்.இந்தநிலையில், இலங்கை ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார், அதில், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடரவும் இலங்கை அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று மைக் பாம்பேயோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி சாவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை விதிக்கப்பட்டதற்கு இலங்கை அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…